டாப் ஆர்டர்
ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் டாப் 3 வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான்,விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஷிகர் ஏமாற்றம்
இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்த மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக விராட் கோலி ஒரு மாதம் ஓய்வில் செல்ல உள்ளதால் இந்த ஆட்டத்தில் தனது பேட் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டித் தொடங்கியதுமே ஷிகர் தவான் டோப்லி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
ரோகித் வெளியேறினார்
ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரோகித் சர்மா 17 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார் .இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். ஆனால் அவர் டோப்லி பந்தில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று விராட் கோலி 22 பந்துகளில் 17 ரன்கள் அடித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்.
மீண்டும் அதே தவறு
ஆனால், மீண்டும்..மீண்டும்.. அதே தவறை செய்து விராட் கோலி ஆட்டம் இழந்தார். டோப்லி ஆப் ஸ்டம்ப் வெளியே வீசிய பந்தை அடிக்க முயன்று விராட் கோலி பட்லரிடம் கேட்ச் ஆனார். இதனால் இந்திய அணி 38 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.