பந்துவீச்சாளர்கள்
மொஹாலி ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு கெட்ட கனவாக இருந்தது. ஆனால் நாக்பூர் மைதானம், பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுக்கும். பந்து பேட்டிற்கு வந்தாலும், பந்துவீச்சாளர்கள் தங்களது மாயஜாலத்தை காட்ட ஏற்ற ஆடுகளமாகும். இதுவரை நாக்பூரில் 12 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
சராசரி ஸ்கோர்
இதில், சராசரியாக முதல் இன்னிங்சில் 151 ரன்கள் தான் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், பெரிய ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை எடுக்காமல், பேட்ஸ்மேன்கள் பொறுமையாக நிலைத்து நின்று ஆட வேண்டும். கடந்த முறை, இந்தியா, இங்கு வங்கதேசத்துடன் டி20 போட்டியில் விளையாடியது. அதில் தீபக் சாஹர் 7 ரன்களை விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டாஸ் வென்றால் என்ன?
இதே போன்று டாஸ் வென்றால் பேட்டிங் செய்வதே நல்லது என்று நாக்பூர் ஆடுகள வரலாறு சொல்கிறது. இங்கு கடைசியாக நடைபெற்ற 12 டி20 போட்டிகளில், 9 ஆட்டங்களில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணி தான் வென்று இருக்கிறது. இந்த நிலையில், நாக்பூரில் கன மழை பெய்து வருகிறது. இதனால், இந்திய அணியின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது.
மிரட்டும் மழை
இந்த நிலையில், போட்டி நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் , இன்றைய ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வேலை போட்டி தடைப்பட்டால் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெறும். இதில், இந்தியா வென்றால் தொடர் சமனாகிவிடும்.