சிட்னி : சிட்னியின் மழை சூழலில் டிரில் போன்ற ஒன்றை கொண்டு தன்னுடைய பயிற்சியை ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 3 தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், அவை அனைத்திலும் ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.
கடந்த ஐபிஎல் 2020 தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் 232 ரன்களையும் அவர் அடித்துள்ளார்.
ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ரவீந்திர ஜடேஜா, 14 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதேபோல 232 ரன்களை அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 3 தொடர்களிலும் அவர் இடம்பெற்றுள்ளார். தற்போது சிட்னியில் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள நிலையில், அந்த தொடர்களுக்காக ஜடேஜா தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டிரில் போன்ற ஒன்றை வைத்து அவர் தனது வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொண்டார். அந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Come rain 🌧️ or shine, the hustle never stops. @imjadeja 💪 #TeamIndia pic.twitter.com/5yQzEWRotS
— BCCI (@BCCI) November 24, 2020