ஆட்ட நாயகன் விருது
இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி அடித்த சதம் காரணமாக ஆட்ட நாயகன் விருது வாங்கினார். இது விராட் கோலி வாங்கும் 32வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன் மூலம் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் கோலி.
எங்க நாட்டு காவலர்களுக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும்.. ஹெய்டனுக்கு நக்கல் பதில் சொன்ன கவாஸ்கர்!
கங்குலியை முந்தினார்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கங்குலி இதுவரை 31 ஆட்ட நாயகன் விருது வாங்கியுள்ளார். தற்போது கோலி 32 விருதுகள் வாங்கி, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை இந்த பட்டியலில் பின் தள்ளியுள்ளார்.
சச்சின் முதல் இடம்
இந்திய அளவில் தற்போது சச்சின் 62 ஆட்ட நாயகன் விருது வாங்கி இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 32 விருதுகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அடுத்த இடங்களில் யார்?
மூன்றாம் இடத்தில் கங்குலி - 31, நான்காம் இடத்தில் யுவராஜ் சிங் - 27, ஐந்தாம் இடத்தில் சேவாக் - 23, ஆறாம் இடத்தில் தோனி - 20 விருதுகள் வென்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
மற்றொரு சாதனை
நாக்பூரில் போட்டியில் தன் 40வது சதம் அடித்த கோலி, மூன்று அணிகளுக்கு எதிராக ஏழு அல்லது அதற்கு மேல் சதம் அடித்து சாதனை செய்தார். இலங்கை அணிக்கு எதிராக 8, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார் கோலி.