மோசமான சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அடிக்கும் 3வது குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்ததே இந்தியாவின் குறைந்த ஸ்கோராக உள்ளது.
அசத்தல் தொடக்கம்
இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து சிறப்பான அடித்தளம் அமைத்துள்ளனர். இந்திய வீரர்கள் திணறிய லீட்ஸ் பிட்ச்-ல், அதுவும் அதே நாளன்று இங்கிலாந்து வீரர்களூக்கு எளிதாக இருந்து. முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 125 பந்துகளை சந்தித்த ரோரி பேர்ன்ஸ் 52 ரன்களுடனும், ஹசீப் ஹமீத் 130 பந்துகளை சந்தித்து 60 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வரை முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 42 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.
இந்திய அணிக்கு சிக்கல்
இங்கிலாந்து அணியில் இன்னும் ஒரு விக்கெட் கூட சரியாத நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இங்கிலாந்து 300 ரன்கள் வரை கூட முன்னிலை வகிக்கலாம். எனவே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய பவுலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோலி போட்ட கட்டளை
2வது நாள் போட்டிக்கான திட்டமிடுவது குறித்து ஓய்வறையில் கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் இந்திய பவுலர்களுக்கு ஆக்ரோஷமான கட்டளைகளை கோலி கூறியுள்ளதாக தெரிகிறது. அதாவது இங்கிலாந்து அணியை முதலில் 150 ரன்களுக்குள் சுருட்டினால் தான் இந்தியா மீள முடியும் எனக்கூறப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலின் படி, 200 முதல் 230 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டி விட வேண்டும் எனக் கோலி கூறியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்தின் விக்கெட்டுகளை வேகமாக சரிக்க வேண்டும் என சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மாவிடம் நேரடியாகவே கோலி கட்டளையிட்டிருப்பதாக தெரிகிறது.
திட்டம் என்ன?
இங்கிலாந்தின் டாப் 3 விக்கெட்களை வீழ்த்தி விட்டால், அதன் பிறகு பேட்டிங்கில் பெரிய பலம் ஏதும் இல்லை. எனவே அடுத்து டேவிட் மாலன் மற்றும் ஜோ ரூட்டின் விக்கெட்டிற்கு மட்டும் தனி ஸ்கெட்ச்களை கோலி போட்டு வைத்துள்ளார். ஹெட்டிங்லி வானிலையை பொறுத்தவரை இன்று காலை முதலே நல்ல வெயில் அடித்து வருகிறது. எனவே வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்காக ஜடேஜாவுக்கும் அதிக வாய்ப்புகள் தரப்படும் எனத்தெரிகிறது.