சிறப்பான ஆட்டம்
அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். 3 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்ற டேவிட் மலான் 70 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை வகித்தது.
சிறப்பான ஆட்டம்
இதனையடுத்து இன்று இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் மிக மோசமாக சொதப்பியதால், மீண்டும் அதையே செய்வார்கள் என ரசிகர்களிடயே பதற்றம் நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். 60 பந்துகளுக்கு வெறும் 16 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. பெரும் ஏமாற்றமாக கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சிகொடுத்தார்.
ஹிட் மேன்
பின்னர் வந்த புஜாரா - ரோகித் சர்மா ஆகியோர் கூட்டணி சேர்ந்து ரன்களை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிக்ஸரெல்லாம் அடித்து அசத்திய ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 59 ரன்களிலேயே வெளியேறினார். இதன் பின்னர் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
ஃபார்முக்கு திரும்பிய புஜாரா
நீண்ட நாட்களாக பந்தை மற்றும் வீணடித்துவிட்டு, ரன் குவிக்காமல் இருந்து வந்த சீனியர் வீரர் புஜாரா மீது கடும் விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இன்று சீரான வேகத்தில் ரன்களை எடுத்தார். அதுவும் குறிப்பிட்ட பந்துகளுக்கு இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தார். முதலில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த புஜாரா, பின்னர் விராட் கோலியுடன் சேர்ந்து அரைசதம் விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரோட் ஒருகட்டத்தில் 100க்கு சென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆட்ட நேர முடிவு
மறுமுணையில் பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆடிய கேப்டன் விராட் கோலியும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்வதற்கு இன்னும் 139 ரன்கள் தேவை.