டி 20
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்த அகமதாபாத் மைதானத்தில் டி 20 போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 5 டி 20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது. அதன்பின் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது.
ஒருநாள்
இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் புனே மைதானத்தில் மார்ச் கடைசி வாரம் நடக்க உள்ளது. மூன்று போட்டிகளும் புனே மைதானத்தில் நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் தற்போது புனேவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கொரோனா கேஸ்கள்
புனேவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 5000க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு இதனால் இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு மீண்டும் லாக்டவுன் கொண்டு வரும் எண்ணத்தில் மஹாராஷ்டிரா அரசு உள்ளது.
வாய்ப்பு
லாக்டவுன் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் பெரும்பாலும் லாக்டவுன் கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள். இதனால் மூன்று ஒருநாள் போட்டிகளையும் இடம் மாற்ற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். புனேவில் இருந்து வேறு இடத்திற்கு ஒருநாள் போட்டிகளை மாற்ற வாய்ப்புகள் உள்ளது.
மைதானம்
இதே அகமதாபாத் மைதானம் அல்லது ஹைதராபாத் மைதானத்தில் ஆட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். கொல்கத்தாவில் தேர்தல் நடக்க உள்ளதால் அங்கு மார்ச் இறுதியில் ஒருநாள் போட்டிகளை நடத்த முடியாது. இதனால் ஒருநாள் போட்டிகள் எந்த மைதானத்திற்கு மாற்றப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.