இங்கிலாந்து டெஸ்ட்
கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாதி வேலையை முடித்துவிட்டது. 4 போட்டிகளில் 2 - 1 என முன்னிலை பெற்றது. ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி மட்டும் தற்போது நடைபெறவுள்ளது.
90 ஆண்டு காத்திருப்பு
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி பிரமாண்ட சாதனை படைத்துவிடும். இந்திய அணி முதன்முதலாக 1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இருந்து தற்போது வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு முறை கூட இந்திய அணி வெற்றி கண்டதே கிடையாது. கடந்த 2007ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட தொடரை கடைசியாக வென்றது.
3 முறை ஏமாற்றமே
கடந்த 90 ஆண்டுகளில் இந்திய அணி மூன்று முறை 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியுள்ளது. இதில் 1959ம் ஆண்டு தத்தா கெயிக்வாட் தலைமையிலான அணி வைட் வாஷ் ஆனது. பின்னர் 2014ல் தோனி தலைமையிலான அணி 3 - 1 என ஏமாந்தது. அதன் பின்னர் விராட் கோலி தலைமையிலும் இதே போன்ற தோல்வியையே சந்தித்தது.
ரோகித்துக்கு ஜாக்பாட்
இந்த நீண்ட கால காத்திருப்பை தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக முன்னணி வீரர்களுடன் முழு பலத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இன்று பயிற்சி போட்டியும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.