சஞ்சு சாம்சன்
டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் 38 பந்தில் 36 ரன்கள் அவர் அடித்தார். ஆனால் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 23 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில்,அந்த ஆட்டத்தில் இந்திய அணி 306 ரன்கள் அடித்தும் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீசும் பேட்ஸ்மேனை சேர்க்காததால் தோல்வியை தழுவியது.
ரசிகர்கள் எதிர்ப்பு
இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்டை நீக்காமல், சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
6வது பவுலர்
தீபக் ஹூடாவை 6வது பந்துவீச்சாளராக பயன்படுத்தும் முடிவில் மாற்றம் இல்லை என்று பயிற்சியாளர் லட்சுமணன் தெளிவாக அணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசி இருக்கிறார். ஒரு வேளை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால், ரிஷப் பண்ட் அணியில் தொடர்கிறார். சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் தொடர்கிறார்,
பிளேயிங் லெவன்
ஷிகர் தவான், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங், சாஹல்