நியூசி, டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் விராட் கோலி மீண்டும் அணிக்குள் வந்தார். இதில் இந்திய அணி இரண்டு இன்னிங்ஸிலும் , 325, 276 எனக் குவித்தது. நியூசிலாந்து அணி 62 மற்றும் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
புதிய சிறப்பு
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு சிறப்புகள் கிடைத்துள்ளன. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவின் வெற்றி பாதை தொடர்ந்துக் கொண்டே வருகிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் 14 வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 10 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
கடைசி தோல்வி எப்போது
சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012 - 2013ம் ஆண்டு காலத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பிறகு விளையாடிய 14 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே கண்டுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த 14 டெஸ்ட் தொடர்களில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
Recommended Video
புகழாரம்
இந்த சாதனையுடன் சேர்ந்து இந்திய அணி மற்றொரு புதிய ரெக்கார்டை செய்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெறும் வெற்றி இதுவே ஆகும். நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதனால் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.