முதல் இன்னிங்ஸ்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் விளையாடி வந்த நியூஸிலாந்து அணி இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் சேர்க்க 250 ரன்களை கடந்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
அஸ்வினின் செயல்பாடு
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது மைதானத்தில் பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் கள நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய போட்டியில் விக்கெட் எடுக்க தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வந்தார். அதில் அவர் பிட்ச்-க்கு நடுவே சென்று பந்துவீசியது தான் சர்ச்சையாகியுள்ளது.
நடுவர் குற்றச்சாட்டு
அதாவது நான்ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் உள்ள ஸ்டம்பிற்கு முன்னர் வந்து பவுலிங் செய்கிறார். இதனால் களத்தில் இருக்கும் நடுவருக்கு பார்வை மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே போல பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தடுப்பதற்காக நான்ஸ்ட்ரைக்கர் நிற்கும் திசை நோக்கி ஓடினார். அவ்வாறு ஓடுவது நான்ஸ்ட்ரைக்கரை தொந்தரவு செய்யும் வகையில் இருந்துள்ளது.
திடீர் வாக்குவாதம்
எனவே அஸ்வினிடம், இனி இப்படி செய்யாதீர்கள் என நடுவர் நிதின் மேனன் கூற, அதிருப்தி அடைந்த அஷ்வின் வாக்குவாதம் செய்துள்ளார். அதாவது, நான் ஏற்கனவே இதே போன்ற முறையில் பந்துவீசி பயிற்சி எடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி போட்டியின் நடுவர் இடமும் இதுகுறித்து எனது சந்தேகங்களை கேட்டேன். இதில் எந்தவித தவறும் இல்லை என்று போட்டியின் நடுவர் கூறிவிட்டதாகவும், கிரிக்கெட் விதிகளின்படியே தான் பந்து வீசுவதாக அம்பயர் நிதின் மேனன் உடன் அஷ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வீடியோ
இந்த வாக்குவாதம் முற்றும் அளவிற்கு சென்றதால், அங்கு வந்த கேப்டன் ரஹானே, விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசுவதாகவும், டேஞ்சர் ஏரியாவில் அஸ்வின் செல்லவில்லை பந்து வீசி விட்டு சரியான அளவில்தான் ஓடுகிறார் என்றும் முறையிட்டார். இதனால் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.