முதல் இன்னிங்ஸ்
இந்திய அணியில் ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் தூண் போன்று நின்று விளையாடிய ஓபனர் மயங்க் அகர்வால் 150 (311) ரன்களும், அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 52 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இருந்தது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
பிட்ச்-ல் திடீர் மாற்றம்
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் ரன்கள் சேர்வதற்குள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. குறிப்பாக ஓபனர் டாம் லதாம் 10 (14) மற்றும் கெயில் ஜேமிசன் 17 (36) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 263 ரன்கள் பின்தங்கியது.
கோலி எடுத்த முடிவு
இதனால் இந்திய அணி பாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி, நாங்கள் பேட்டிங் செய்யவுள்ளோம் என அறிவித்தார். 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் ஓப்பனர்களக மயங்க் அகர்வால் 62, சத்தீஸ்வர் புஜாரா 47 ஆகியோர் களமிறங்கி சிறப்பாக விளையாடினர். இதன்பிறகு வந்த சுப்மன் கில் 47, கோலி 36 ரன்கள் அடிக்க, 276 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
வெற்றி
540 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்த முறையும் சொதப்பல்களே மிஞ்சியது. இந்திய ஸ்பின்னர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க, டேர்லி மிட்செல் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்களை எடுத்தார். இறுதியில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.