புறக்கணிக்க வேண்டும்
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனவே, இந்தியா போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்தியாவின் இன்னொரு துவக்க வீரரான கம்பீர், இந்தியா போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றார்.
2 முக்கிய விஷயங்கள்
அப்போது, இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேவக், 2 முக்கிய விஷயங்களை இந்த தருணத்தில் கவனிக்க வேண்டும். ஒன்று... நாம் பாகிஸ்தானுடன் போர் செய்யப்போகிறோமா, இல்லையா என்பது.
ஜெயிக்க வேண்டும்
மற்றொன்று... நாட்டின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோமா என்பதுதான். ஒருவேளை நாம் ஆடினால் கட்டாயம் வெல்ல வேண்டும் என்று கூறினார்.
நாக் அவுட் போட்டிகள்
உலக கோப்பை 2019 தொடர் வரும் மே 30ம் தேதி துவங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக 9 போட்டிகளில் ஆட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.