ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக்கொள்வதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை முதல் முறையாக வென்று அசத்தல்.
17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 18 பந்துகளில் 17 ரன்கள் தேவை.
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 56 ரன்களும், பாபர் அசாம் 62 ரன்களும் எடுத்துள்ளனர்.
11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 54 பந்துகளில் 72 ரன்கள் தேவை.
8 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ரிஸ்வான் 21 ரன்களுடனும், பாபர் அசாம் 14 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி அரைசதம் அடித்து அசத்தல்
இந்திய அணியின் கடைசி நம்பிக்கை உடைந்தது. சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி 57 ரன்களுக்கு வெளியேறினார்.
இந்திய அணியில் 4வது விக்கெட் சரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு அவுட்.
12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானை பந்தாடும் பண்ட்.. மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்.. தலைகீழாக மாறும் ஆட்டம்.
தடுமாறிய இந்திய அணியை மீட்டது பண்ட் - கோலி பார்ட்னர்ஷிப். 37 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 26 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப்
6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. அணியை மீட்க கேப்டன் கோலி போராட்டம்.
இந்திய அணியில் மூன்றாவது விக்கெட் சரிந்தது. ஹுசைன் அலி வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்களுக்கு அவுட்டானார்.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. அணியை மீட்க சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி போராட்டம்.
இந்திய அணியில் 2வது விக்கெட் சரிந்தது. சாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 3 ரன்களுக்கு வெளியேறினார்.
2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.