கொரோனா
இந்த நிலையில் தான், இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஜுலை.27) உறுதி செய்யப்பட்டது. இதனால், நேற்றே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
3 வீரர்கள் மிஸ்ஸிங்
இதில், வேறு எந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, 2வது டி20 போட்டி திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என்று தெரிகிறது. அதேசமயம், க்ருனால் பாண்ட்யாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய மூவரும் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பின்னடைவு
இவர்கள் மூவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும், 2வது மற்றும் கடைசி டி20 போட்டி என இரண்டு போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த சூர்யகுமார் இந்த போட்டியில் விளையாடவில்லை எனில், அது இந்திய அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவாக அமையும்.
டெஸ்ட் தொடருக்கும் மிஸ்ஸிங்
அதுமட்டுமின்றி, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் தொடருக்கு ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ஷாவும், சூர்யாவும் இங்கிலாந்து அழைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து சென்று அணியுடன் இணைய முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.