வெளியில் போய் சாப்பிடாதீங்க
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு வீரர்களுக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வெளியில் போய் சாப்பிடுவதை வீரர்கள் அறவே தவிர்க்க வேண்டும். இதை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல ரசிகர்களுடன் நெருங்கி நின்று செல்பி எடுப்பது கை குலுக்குவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
செல்போன்களைத் தொடாதீங்க
அணியினரைத் தவிர வேறு யாரிடமும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தெரியாதவர்களின் செல்போன்களைத் தொடவே கூடாது. அணியினர் பயணிக்கும் விமானம், தங்கும் ஹோட்டல் அறைகள், டிரஸ்ஸிங் ரூம்கள் போன்றவற்றை வீரர்கள் வருவதற்கு முன்பும் கிளம்பிச் சென்ற பிறகும் சானிட்டைஸ் செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.
டாய்லெட் சுத்தமாக இருக்கணும்
ஸ்டேடியத்தில் உள்ள கழிப்பறைகளில் தேவையான அளவுக்கு கைகளைக் கழுவும் சானிட்டைசர் இருக்க வேண்டும். யாருக்காவது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கண்காணிப்பு செய்யவும் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும்.
அடிக்கடி கை கழுவுங்க
வீரர்கள் அவ்வப்போது தங்களது கைகளை குறைந்தது 20 விநாடிகளாவது கழுவிக் கொள்ள வேண்டும். கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பது குறித்தும் வீரர்களுக்கும், அணியினருக்கும் அறிவுறுத்ததப்பட்டுள்ளது. அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். இறுமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் வாயை கர்ச்சீப்பால் மூடிக் கொள்ள வேண்டும்.
வாயைத் தொடாதீங்க
வீரர்கள் அல்லது அணியினர் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, உள்ளிட்ட ஏதேனும் இருந்தால் உடனடியாக அணியின் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். முகம், வாய், மூக்கு, கண்களை தொடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கட்டளைகளை இந்திய அணியினருக்கு மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடர் மட்டுமல்லாமல் வருகிற ஐபிஎல் தொடரிலும் இது பின்பற்றப்படுமாம்.