நாளை 2வது ஒருநாள் போட்டி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
வென்றால் தொடர் வசம்
நாளைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும்.
கெய்ல் விலகல்
மேற்கிந்திய தீவுகள் அணியில் காயம் காரணமாக அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் விலகி உள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பதிலடி முயற்சி
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மேற்கிந்திய தீவுகள் பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
மழை குறுக்கிடுமா?
தற்போது ஆந்திராவை ஹெலன் புயல் தாக்கி உள்ளது. புயல் கரையைக் கடந்தாலும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதியான விசாகப்பட்டினத்தில் மழை தொடர்கிறது. இரு அணி வீரர்களும் நேற்றே கொட்டும் மழையில் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தனர். நாளைய போட்டி மழையின் கருணையில் இருக்கிறது.