முதல்முறையாக இந்தியா பங்கேற்பு
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டிக்காக காத்துள்ளனர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் முன்னெடுப்பில் இந்த போட்டி நாளை துவங்கவுள்ளதையடுத்து கொல்கத்தா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வங்கதேச பிரதமர் உள்ளிட்ட இருநாடுகளின் பல்வேறு அரசியல் தலைவர்கள் போட்டியின் முதல்நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் பங்கேற்க ஆர்வம்
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறவுள்ள இந்த பகலிரவு போட்டியில் பங்கேற்கவுள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் கொல்கத்தா வந்தடைந்துள்ள நிலையில் அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரும் ஆதங்கம்
நாளைய போட்டி பந்தில் விளையாடப்பட உள்ள நிலையில், இந்த பந்தில் விளையாடிய அனுபவம் கேப்டன் விராத் கோலி, துணை கேப்டன் ரஹானே, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய 5 ஆட்டக்காரர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வங்கதேச அணிக்கும் இந்த பந்தில் விளையாடிய அனுபவம் இல்லை.
இந்தியா, வங்கதேசம் அனுபவம் பெறவில்லை
கடந்த 2015 முதலே பிங்க் பந்துகளை கொண்டு டெஸ்ட் போட்டிகள் சர்வதேச அளவில் நடைபெற்றுவந்த போதிலும் இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் இந்த பந்தை கொண்டு விளையாடப்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை.
முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பெருமிதம்
பிங்க் பந்துகளில் விளையாடி இந்திய அணிக்கு அனுபவம் இல்லை என்ற கூற்றுக்கு தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார். தற்போதைய இந்திய அணி ஐஸ்லாந்தின் பனியிலோ சஹாராவின் பாலைவனத்திலோ எங்கே விளையாடினாலும் வெற்றி வாகை சூடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.