அணியை மீட்ட ஜோடி
விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது மேத்யூஸ், திரிமன்னே ஜோடி கை கோர்த்தது. அணியை அவர்கள் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதனமாக ஆடி ரன்விகிதத்தை சீராக உயர்த்தினர். திரிமன்னே 68 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 113 ரன்கள் விளாசினார்.
265 ரன்கள் இலக்கு
மேத்யூஸின் அதிரடியான சதத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். 265 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது இந்தியா.
பார்ட்னர்ஷிப்
தொடக்க ஜோடியாக களம் கண்டது ரோகித், ராகுல். இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தனர். துவக்கம் முதலே அதிரடியை துவங்கிய ரோகித் சர்மா 46 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
5வது சதம்
மறுமுனையில் அவருக்கு துணைநின்றார் ராகுல். அரைசதத்துக்கு பிறகு பவுண்டரிகளாக விளாச துவங்கிய ரோகித், 93 பந்துகளில் பவுண்டரி அடித்து இத்தொடரின் 5வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ரோகித் சாதனை
இதன்மூலம் உலக கோப்பையில் ஒரே தொடரில் 5 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, ஒரு உலக கோப்பை தொடரில் 4 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனை ரோகித் சர்மா தகர்த்துள்ளார்.
கோலி, ராகுல் ஜோடி
சதமடித்த உடன் ரஜிதா பந்தில் ஆட்டமிழந்தார் ரோகித். அடுத்து களத்துக்கு வந்தார் கோலி. ராகுலுடன் கைகோர்த்தார். ரன்கள் வந்தன. இளம் வீரர் ராகுலும் சதம் அடித்து அசத்தினார். இறுதி கட்டங்களில் இருவரும் இலங்கை பந்துவீச்சை வெளுத்து தள்ளினர். 111 ரன்கள் எடுத்த ராகுல் மலிங்கா பந்தில் வீழ்ந்தார்.
7 விக். வித்தியாசத்தில் வெற்றி
3வது விக்கெட்டுக்கு வந்தார் ரிஷப் பன்ட். வெறும் 4 ரன்களுடன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இறுதியில், 43.3 ஓவர்களில் 265 ரன்கள எடுத்து 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா. இலங்கை வெற்றியை தொடர்ந்து 15 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. ஆஸி. 2ம் இடத்தில் உள்ளது. ஒருவேளை தென் ஆப்ரிக்காவை அந்த அணி வீழ்த்தினால் மீண்டும் முதலிடம் பெறும்.