பிசிசிஐ அங்கீகாரம்
இத்தனைக்கும் தங்களுக்கு பிசிசிஐ அங்கீகாரம் கிடைக்கவே மாற்றுத் திறனாளிகள் அணி தடுமாறி இருக்கிறது. அங்கீகாரம் கிடைத்தாலும், நிதி உதவி எதுவும் செய்யவில்லை பிசிசிஐ. அப்படி இருந்தும் சமாளித்து இங்கிலாந்து சென்று வெற்றி வாகை சூடியுள்ளது இந்திய அணி.
இறுதிப் போட்டி
இந்த டி20 தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்பே கணிக்கப்பட்டு இருந்தது. இறுதிப் போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின.
இந்தியா பேட்டிங்
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்திய அணி. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 18௦ ரன்கள் குவித்து அசத்தினர் இந்திய வீரர்கள். துவக்க வீரர்கள் பனாசே 36, விக்ராந்த் கேனி 29, மகேந்திரன் 33, ஆர்.ஜி.சாண்டே 53 ரன்கள் எடுத்து அணி பெரிய ஸ்கோர் எடுக்க காரணமாக இருந்தனர்.
கடின இலக்கு
ஆர்.ஜி.சாண்டே 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து இருந்தார். அவர் இரண்டு ஃபோர், நான்கு சிக்ஸ் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு 181 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அதிரடி
இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக ஆடியது. முதல் 11 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 90 ரன்கள் குவித்து இருந்தது. அப்போது இங்கிலாந்து தான் வெற்றி பெறும் என கருதப்பட்டது.
இந்தியா வெற்றி
அப்போது இந்திய அணியின் பந்துவீச்சு வேகம் பெற்றது. தொடர்ந்து விக்கெட்களை அள்ளிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களுக்குள் சுருட்டியது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 மாற்றுத் திறனாளிகள் உலக கிரிக்கெட் தொடரை வென்று வாகை சூடியது.