இந்தியா தோல்வி
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐதராபாத்தில் முதல் டி20 போட்டியை விளையாடி இந்தியாவிடம் தோல்வியை அடைந்தது. இதனிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று ஆடப்பட்ட இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
30 பந்துகளில் 54 ரன்கள் குவிப்பு
இந்த போட்டியின் 3வது ஆட்டக்காரராக இளம் வீரர் சிவம் தூபே களமிறக்கப்பட்டார். கேப்டன் கோலி நம்பிக்கையுடன் இவரை 3வது ஆட்டக்காரராக களமிறக்க, அந்த நம்பிக்கையை காப்பாற்றும்வகையில் தூபே, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 30 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.
மகிழ்ச்சி அளிக்கவில்லை என பேட்டி
இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு தூபே அடித்த 54 ரன்கள் மிகுந்த உதவியாக இருந்தது. ஆயினும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், தனது முதல் அரைசதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தூபேவின் முதல் அரைசதம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி தூபே தனது முதல் அரைசதத்தை விளாசியுள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை அவர் பெற்றுள்ளார்.
டி20 போட்டியில் முதல் அரைசதம்
இதனிடையே, சர்வதேச டி20 போட்டியில் விளையாடி தனது முதல் அரைசதத்தை அடித்துள்ள சிவம் தூபே, இந்த பட்டியலில் இரண்டாவது இந்திய வீரராக இணைந்துள்ளார். முன்னதாக கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் ராபின் உத்தப்பா, இதேபோல தனது முதல் அரைசதத்தை அடித்தார்.