பண்ட் துவம்சம்
உலகின் நம்பர் 1 பவுலரும், டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவருமான பும்ராவின் பந்துவீச்சையே அடித்து துவம்சம் செய்துவிட்டார் பண்ட். 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பும்ராவுக்கு காயம்
டெல்லி கேபிடள்ஸ் அணியின் பேட்டிங்கின் போது, அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை பும்ரா வீசினார். அதை தடுக்க முயற்சிக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
காயத்தால் கவலை
அவரை அணியின் மருத்துவக்குழுவினரும், சகவீரர்களும் அழைத்து சென்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே நம்பியிருந்த மலிங்கா மற்றும் ஆடம் மில்னே ஆடாதது பின்னடைவாக உள்ளது.இந்த தருணத்தில் டெத் ஓவர் மன்னர் பும்ராவின் காயம் அனைவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.
நிர்வாகம் சோகம்
மும்பை இந்தியன்சுக்கு பெரிய இழப்பில்லை என்று சொல்லலாம். ஆனால் உலக கோப்பை தொடர் வர உள்ள நிலையில், நட்சத்திர பவுலர் பும்ராவின் காயம், அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தகவல் இல்லை
ஆனால் பும்ராவிற்கு பெரிய காயம் இல்லை என்றும் அதனால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அடுத்த போட்டியில் பும்ரா ஆடுவது குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்பட வில்லை.
ரசிகர்கள் மகிழ்ச்சி
மும்பை அணி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதோ இல்லையோ இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அப்புறம் என்ன.. உலக கோப்பை தொடரில் நம்ம பும்ரா இருக்காரு.. கவலையே படவேண்டாம்.