கடினமான நாட்கள்
2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாடினேன். முதல் போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 50 ரன்களுக்கு மேல் கொடுத்தேன். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானேன், என்னை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கோபமாக திட்டினார்கள். ஒரு சிலர் நீ ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய். அப்பாவை போல் ஆட்டோ ஓட்டு போ என்றார்கள்
கிரிக்கெட் வாழ்க்கை முடிவு
2017 மற்றும் 18ஆம் ஆண்டு எனக்கு மோசமாகவே அமைந்தது. ஐ.பி.எல். தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை. இந்தியாவுக்காக விளையாட கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை. பெங்களூரு அணி என்னை மீண்டும் தக்க வைக்காது என்று நினைத்தேன். கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என்று எண்ணி, மனதளவில் தொய்வாக இருந்தேன்
கோலியின் ஆதரவு
ஆனால், என்னை அணியிலிருந்து நீக்காமல் விராட் கோலி தக்க வைத்து கொண்டார். எனக்கு ஊக்கம் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்தார். எனக்கு திறமை உள்ளது, பயிற்சி செய் என்று வழிக்காட்டினார். அதன் மூலம் தான் என் வாழ்நாளில் கடினமான கட்டத்தை தாண்டினேன். விராட் கோலி எனக்கு சகோதரர் போன்றவர். விராட் கோலியை எங்கள் வீட்டுக்கு அழைத்தேன். அவரும் வந்து உணவருந்தி எனது பெற்றோரை பார்த்தார் என்று அந்த பேட்டியில் முகமது சிராஜ் கூறினார்.
சூப்பர் ஹீரோ
இந்த நிலையில், விராட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிராஜ், என்னுடைய சூப்பர் ஹீரோவுக்கு நன்றி. எனக்கு ஒரு சகோதரன் போல் இருந்து ஊக்கமும், நம்பிக்கையும் அளித்தீர்கள். என் கடினமான நாட்களில் கூட என் திறமையை கண்டறிந்து ஆதரவு அளித்தீர்கள். என்றுமே நீங்கள் தான் என் கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளார்