வெற்றியை தந்த பவுண்டரி
நியூசிலாந்தை விட இங்கிலாந்து ஏறக்குறைய 10 பவுண்டரிகள் அதிகமாக அடித்திருந்ததால், புதிய உலக சாம்பியனாக இங்கிலாந்து அறிவிக்கப்பட்டது. ஐசிசி விதியின் படி இதை ஏற்புடையது என்றாலும், பைனலுக்கு இந்த விதியை கொண்டு கோப்பைக்கான அணியை தேர்ந்தெடுப்பதா என்று கேள்விகள் எழுந்தன.
விதிமுறை சரியல்ல
மேலும், இதுபோன்ற உலக சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் போட்டிகளில் இப்படி ஒரு விதி முறையை கடைபிடிப்பது சரியானதல்ல என்றும் வல்லுனர்களும், விமர்சகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐசிசி விதிமுறைகளை கட்டாயம் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ரவி சாஸ்திரி கருத்து
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியூசிலாந்து குறித்தும், அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்தும் தமது கருத்தினை கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் அதற்கான விவரத்தை வெளியிட்டுள்ளார்.
|
அமைதி, பெருந்தன்மை
அதில் அவர் கூறியிருப்பதாவது: வில்லியம்சனின் அமைதி,பெருந்தன்மை இந்த உலக கோப்பையில் மிகவும் சிறப்புமிக்கது. மேலும் அவரின் இந்த அமைதியான அணுகுமுறை மதிப்பிற்குரிய ஒன்றாகவும், போற்றப்பட வேண்டியதாகவும் உள்ளது.
சரிபாதி உரிமை
இங்கிலாந்து கோப்பையை சொந்தம் கொண்டாடினாலும் அதில் சரிபாதி உரிமை நியூசிலாந்துக்கும் இருக்கின்றது என்பது தான் உண்மை. எங்களுக்குத் தெரியும் அந்த உலக கோப்பை உங்களுக்கும் சேர்ந்ததே. நீங்கள் Kane மட்டும் இல்லை. நீங்கள் Kane (Can என்கிற அர்த்தத்தில்) மற்றும் Able, god bless என்று பாராட்டியுள்ளார்.
பட்டியல் தயார்
இதே நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி தான், தற்போது பூதாகரமாக எழுந்து தோனியின் இடத்துக்கு வேட்டு வைக்க ஆரம்பித்திருக்கிறது. கேள்வி பட்டியலை வைத்துக் கொண்டு பிசிசிஐ அமைப்பானது கோலி மற்றும் ரவி சாஸ்திரி வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.