வெடித்த சர்ச்சைகள்
ஆனால்.... அதில் பல சர்ச்சைகளும் வெடித்துள்ளன. குறிப்பாக... ராயுடு சேர்க்கப்படாமல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராயுடுவும், ஓஜாவும் மாறி, மாறி பிசிசிஐ மீது புகார் கூறி வருகின்றனர்.
முப்பரிணாம வீரர்
அணி தேர்வு குறித்த அறிவிப்பின் போது, தேர்வுக்குழு தலைவர் பிரசாத், விஜய் சங்கர் ஒரு 3டி பிளேயர் என்று வர்ணித்தார். அதற்கு பதிலடியாக உலக கோப்பையை பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகள் ஆர்டர் செய்தேன் என்று அம்பத்தி ராயுடு கேலியுடன் தமது டுவிட்டரில் பதிவு செய்தார்.
முயற்சித்தோம்
இந்நிலையில் விஜய் சங்கர் குறித்து விராட் கோலி கூறி இருப்பதாவது: நிறைய அணி சேர்க்கைகளை முயற்சி செய்தோம். சிலபல வீரர்களை சோதித்தோம். ஆனால் விஜய் சங்கர் வந்தவுடன் 3டி ஆகிவிட்டது. பவுலிங், பேட்டிங் மற்றும் நன்றாக பீல்டிங்கும் செய்வார்.
விஜய் சங்கர் திறமையானவர்
அவர் திறமையான பேட்ஸ்மென். மற்ற அணிகள் சமச்சீரான வகையில், வீரர்களை தேர்வு செய்யும் போது ஏன் பிசிசிஐயும் செய்யக் கூடாது. அதற்காக தான் விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்றார் கோலி.