கவர் ட்ரைவ்
விராட் கோலிக்கு கவர் ட்ரைவ் ஆடுவதில் கில்லாடி என்றே கூறலாம். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் மொயின் அலி வீசிய பந்தில் கோலி தொடக்கத்திலேயே கவர் ட்ரைவ் ஆட முயன்றார். ஆனால் பந்தில் நல்ல ஸ்விங் இருந்ததால் ஸ்டம்பை உறசிச்சென்றது. அவரின் இந்த அவசர முடிவுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
நிதானம்
முதல் இன்னிங்சில் செய்த தவறை 2வது இன்னிங்சில் செய்யக் கூடாது என்பதால் கோலி மிக பொறுமையாக விளையாடினார். 20 பந்துகளுக்கு பிறகே கோலி தன் முதல் ரன்னை எடுத்தார். இதற்கு முன்னர் 2012ல் 29 பந்துகள் எடுத்துக்கொண்டதே அவரின் அதிகபட்ச நேரமாகும்.
பொறுப்பு
கடந்த போட்டி போல் இல்லாமல் இந்த முறை, தான் சந்தித்த 103வது பந்தில் தான் ஸ்வீப் ஷாட் ஆடவே கோலி முற்பட்டார். மேலும் கடந்த முறை போன்று மிடில் ஸ்டம்ப்பில் நின்று ஸ்வீப் ஷாட் ஆடாமல், ஆஃப் ஸ்டம்பை மறைத்து தனது பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மொத்தமாக அவர் 200 நிமிடங்கள் வரை களத்தில் நின்றுள்ளார்.
ஒற்றுமை
2வது இன்னிங்சில் அஸ்வின் - கோலி ஜோடி 96 ரன்கள் சேர்த்தது. இதில் அடித்து ஆட நினைக்காத கோலி, சுழற்சி முறையில் ஸ்ட்ரைக்கை மாற்றி விளையாடினார். இதனால் கோலி எடுத்த 62 ரன்களில் அதிகளவில் சிங்கில்ஸ், டபுல்ஸாக அமைந்தது. 7 பவுண்டரிகளே அவர் அடித்தார்.