184 ரன்கள் குவிப்பு
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, கெய்லின் அதிரடியான 79 ரன்கள், சர்ப்ராஸ் கானின் சாமர்த்திய பேட்டிங் காரணமாக 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்தார்.
பஞ்சாப் திணறல்
அவரை வீழ்த்தவே முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 69 ரன்களை குவித்து மிரட்டலாக ஆடிக் கொண்டிருந்தார். அவரை எப்படி அவுட்டாக்குவது என்று பஞ்சாப் திணறி கொண்டிருந்தது. அப்போது, 13வது ஓவரை வீசிய அஸ்ஷ்வின், பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
அவுட்டான பட்லர்
அஸ்வின் பந்துவீச வரும்போதே பட்லர் கிரீஸை விட்டு வெளியேறியிருந்தார். அதைக்கண்ட அஸ்வின் பந்தை போடாமல் ஸ்டம்பில் அடித்து பட்லரை ரன் அவுட் செய்தார். தேர்டு அம்பயரும் அதற்கு அவுட் கொடுத்தார்.
கடும் விமர்சனம்
அதுதான் அந்த ஆட்டத்தின் திருப்புமுனை. அதன்பிறகு ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. அஸ்வினின் இந்த செயலை ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்திருந்தார்.
விளக்கம்
அந்த போட்டிக்கு பின்னர் அந்த சம்பவம் குறித்து பேசிய அஸ்வின், நடந்தது திட்டமிடப்பட்டது அல்ல, விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று விளக்கமளித்தார். ஆனால் அவரது விளக்கத்தை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அஸ்வின் சொல்வது பொய்
இது குறித்து முன்னாள் வீரர் பிரசன்னா கூறியதாவது:அஸ்வினுக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது. ஆனாலும்... அதை எப்படியாவது மறைக்க தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் என்ன பண்ணினார் என்பதில் தெளிவு இல்லை. அஸ்வின் பொய் சொல்கிறார். உண்மையை சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.