9 சதங்கள்
அதில் முக்கிய அம்சம்.. ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் கேப்டனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் ரோகித்தை விட கோலி அதிக சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அவர் 9 சதங்களையும், கோலி 6 சதங்களையும் அடித்துள்ளனர்.
15 சதங்கள்
கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் ரோகித் 15 சதங்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக, கோலி 14 சதங்களை அடித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். ஏன் என்றால், 2011ம் ஆண்டு உலக கோப்பை அணியில் அவர் இடம் பெறவில்லை.
முக்கிய வீரரானார்
குறிப்பிட்ட அந்த ஆண்டில் உலக கோப்பை தொடருக்கான அணியில் அவர் இல்லை. அந்த ஏமாற்றம் கிரிக்கெட்டை விட்டே விலகி விடலாம் என்று அவருக்கு தோன்றியது. ஆனால், காலங்கள் செல்ல, செல்ல.. 2015ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார். 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் என 8 போட்டிகளில் 330 ரன்கள் குவித்தார். தொடர்ந்து நடப்பு தொடரில் இந்தியாவின் முக்கிய வீரராக மாறியிருக்கிறார்.
ராயுடு கவனிப்பாரா?
நடப்பு தொடரில் அம்பத்தி ராயுடுவிற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக அறிவித்தார். அம்பத்தி ராயுடுவின் முடிவு பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவர் ரோகித்தை போன்று போராடி அணியில் வந்திருக்க வேண்டும் என்று கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.