அபார பவுலிங்
புதிய பந்தில் புவனேஷ்வர் குமார் எந்த அளவுக்கு திறமையாக வீசுவாரோ, அதையே தான் தீபக் சாஹரும் செய்கிறார். ஸ்விங் பவுலிங் தான் பலம். புதிய பந்தில் எதிர்பார்த்ததை விட அற்புதமாக பவுலிங் வீசுகிறார்.
அணியின் எதிர்காலம்
இளம் வீரர் ரிஷப் பன்டை இந்திய அணியின் எதிர்காலமாக காண்கிறோம். அவர் இதே போன்றே சீராக ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்றால் அணிக்கு வலுவாக அமையும்.
வலுவான அணி
ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் சாதாராண அணி கிடையாது. ரொம்பவும் வலுவான அணி. எனவே அந்த போட்டிகளில் மிகவும் கடினமானதாக இருக்கலாம். ஆனாலும் அதை சிறப்பாக எதிர்கொள்வோம் என்றார்.
முதல் முறை பேட்டிங்
இந்த டி20 தொடரில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ் மென்கள் ஓரளவுக்கு ரன்களை எடுத்தனர். ஆனால், கோலி, பன்ட் அரை சதங்கள், தீபக் சாஹர் பவுலிங் ஆகியவற்றால், 3க்கு 0 என தொடர் இழப்பை அந்த அணியினால் தவிர்க்க முடியவில்லை.