ஏன் இந்த மாற்றம்?
இதில், முதல் டெஸ்ட் போட்டியில், மிடில் ஆர்டரில் சீனியர் வீரர் புஜாரா நீக்கப்படலாம் என்று நாம் முன்பே பார்த்திருந்தோம். அவருக்கு பதில், லோகேஷ் ராகுலை மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் பேசியிருந்தார். அதாவது, எப்போதும் ஓப்பனிங் இறங்கும் ராகுலை எப்படி மிடில் ஆர்டரில் களமிறக்குவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
முதல் டெஸ்டில் வாய்ப்பு
இந்நிலையில், மிடில் ஆர்டரில் ராகுலை களமிறக்குவதா அல்லது புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதில், கோலி உட்பட பெரும்பாலானோர் ராகுல் பெயரை டிக் செய்யவே விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம், சில பிசிசிஐ நிர்வாகிகள் புஜாராவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கலாம் என்று கூறுவதாகவும் தெரிகிறது.
அணி மீட்டிங்
இங்கு கோலியின் கான்செப்ட் என்பது, புஜாராவை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதில்லாமல், அவரை 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகளில் வெளியே உட்கார வைக்கும் பட்சத்தில், ஓரளவு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறாராம். ஆனால், புஜாரா இதில் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மிக அண்மையில் நடந்த அணி மீட்டிங்கில், புஜாரா சற்று ஓப்பனாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
Recommended Video
கோலி தரப்பில் விளக்கம்
அந்த அணி மீட்டிங்கில் ரஹானே, புஜாரா, உள்ளிட்ட மிகச் சில சீனியர் வீரர்கள் மட்டும் பங்குபெற்றதாக தெரிகிறது. அந்த மீட்டிங்கில், லோகேஷ் ராகுல் இடம் குறித்து புஜாராவிடம் நேரடியாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில், தனது அதிருப்தியை வெளிக்காட்டிய புஜாரா, "நான் வேண்டுமானால் மனைவியை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்புவிடட்டுமா?" என்ற ரீதியில் தனது எதிர்ப்பினை அவர் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கேப்டன் கோலியோ தான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தனது தரப்பில் புஜாராவை சமாதானப்படுத்தி இருக்கிறாராம்.