|
இந்திய அணியின் தோல்வி
இந்திய மகளிர் அணி சென்ற முறை 2017 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியும், அதில் தோல்வி அடைந்தனர். இந்திய மகளிர் அணி அழுத்தம் தரும் சேஸிங் போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை என்ற புகார் இருந்தது.
அதிரடியாக ஆட பயிற்சி
தற்போது பயிற்சியாளர் ரமேஷ் போவார் தலைமையில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியினர், பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆட பயிற்சி செய்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய வீராங்கனைகள் நேர்மறை எண்ணத்துடன் உலக டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர்.
ஐந்து அணிகள்
இந்த தொடரில் இந்தியா "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக பத்து அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தற்போது டி20 தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இளம் வீராங்கனைகள்
இந்திய அணியைப் பொறுத்தவரை ஸ்மிருதி மந்தனா, ஜெமிமாஹ் ரோட்ரீகஸ் உள்ளிட்ட வீராங்கனைகள் இந்திய அணியில் வலுவாக உள்ளனர். பயிற்சியாளர் ரமேஷ் போவார் கூறுகையில் இந்திய அணியில் இளம் வீராங்கனைகள் இருப்பது நல்ல விஷயம். அவர்கள் பயம் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என கூறினார்.