குவியும் பாராட்டுகள்
இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். அவரது பேட்டிங்குக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால் அதை விடவும் ஆச்சரியப் படுத்தும் செயலை அவர் செய்து அனைவரின் மனங்களையும் வென்றார்.
ஊதியம் அளிப்பு
இந்நிலையில், இந்தப் போட்டியின் இறுதியில் சஞ்சு சாம்சன், ஒரு நெகிழ்ச்சியான முடிவை அறிவித்தார். அதாவது இந்தப் தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும், மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாக கூறினார்.
தீவிர பணி
இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது: போட்டிகள் நடைபெற்றதற்கு முக்கிய காரணம், மைதான ஊழியர்கள் தான். ஏனென்றால் மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது. அதனை போக்க அவர்கள் தீவிரமாக பணியாற்றினர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
அவர்கள் இல்லையென்றால், இந்த போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை. ஆகவே அவர்களுக்கு என்னுடைய சம்பளமான, ரூபாய் 1.5 லட்சத்தையும் அளிக்கிறேன் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பால் ரசிகர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.