மும்பை: சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக மும்பை அணி கேப்டன் ரஹானே வெளியேறியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2019ம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. 2ம் சுற்று போட்டிகள் போட்டிகள் 8ம் தேதி தொடங்குகிறது.
இதனிடையே காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ரஹானே விலகியுள்ளார். இதுகுறித்து மும்பை அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், ரஹானே மும்பை அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முதல் சுற்றுப் போட்டிகளிலேயே ரஹானே காயத்தோடு பங்கேற்றார். தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் விலகியுள்ளார் என்று கூறியுள்ளார்.
தல தோனி ஊரில் 3வது ஒருநாள் போட்டி... ஆஸி.யை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
காயம் காரணமாக, ரஹானே விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக, ஸ்ரேயாஸ் அய்யர் அணியை வழிநடத்தி செல்வார். ஐபிஎல் தொடரில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் அணி இவருடைய உடல்நலத்தை கூர்மையாக கவனித்துவருகிறது.