For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா கையை தாக்கிய பந்து.. பதறி போன ரசிகர்கள்.. 400வது டி20 போட்டியில் ஹிட்மேனுக்கு சோகம்

கவுகாத்தி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.

டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்திய அணியில் ஏற்கனவே பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

பும்ரா டி20 உலககோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ள நிலையில், இன்று இந்திய அணி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அச்சம் ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்புதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு

ரோகித் 400வது டி20

ரோகித் 400வது டி20

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 400வது டி20 போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்று இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரோகித்துக்கு காயம்

ரோகித்துக்கு காயம்

ஆட்டத்தின் 2வது ஓவரில் 4வது பந்தில் வெயன் பார்னல் வீசிய பந்தை ரோகித் சர்மா தூக்கி பின்னால் அடிக்க முயன்றார். அப்போது பந்த ரோகித் சர்மாவின் விரலில் பட்டது. பந்து வந்த வேகத்திற்கு பவுண்டரிக்கு சென்றது. ஆனால் ரோகித் சர்மா வலியால் துடித்தால் ரசிகர்களும், அணி நிர்வாகிகளும் பதறினர்.

பதறிய ரசிகர்கள்

பதறிய ரசிகர்கள்

உடனடியாக அணியின் பிஷியோ, மைதானத்திற்கு வந்து ரோகித் சர்மாவை பரிசோதனை செய்தார். அப்போது கையை பிடித்து காயத்தின் தன்மையை பிஷியோ ஆய்வு செய்தார். இதனையடுத்து, ரோகித் சர்மாவுக்கு மருந்து கொடுத்து, பேட்டை பிடிக்க முடிகிறதா என்று ஆய்வு செய்தார். ரோகித் வலியால் துடித்தாலும், பேட்டிங் செய்வதாக கூறினார்.

ரோகித் 43 ரன்கள்

ரோகித் 43 ரன்கள்

இதனையடுத்து ரோகித் சர்மா, தனது பேட்டிங்கை தொடர்ந்து வழக்கம் போல் பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. 37 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 43 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இந்த ஆட்டத்தின் போது ரோகித்துக்கு நடுவர் WIDE தராததால், அவர் நடுவரை கோபமாக திட்டினார்.

Story first published: Sunday, October 2, 2022, 21:06 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
Injury Scare for Rohit sharma in his 400th t20 game ahead of t20 WC ரோகித் சர்மா கையை தாக்கிய பந்து.. பதறி போன ரசிகர்கள்.. 400வது டி20 போட்டியில் ஹிட்மேனுக்கு சோகம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X