ரோகித் 400வது டி20
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 400வது டி20 போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்று இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரோகித்துக்கு காயம்
ஆட்டத்தின் 2வது ஓவரில் 4வது பந்தில் வெயன் பார்னல் வீசிய பந்தை ரோகித் சர்மா தூக்கி பின்னால் அடிக்க முயன்றார். அப்போது பந்த ரோகித் சர்மாவின் விரலில் பட்டது. பந்து வந்த வேகத்திற்கு பவுண்டரிக்கு சென்றது. ஆனால் ரோகித் சர்மா வலியால் துடித்தால் ரசிகர்களும், அணி நிர்வாகிகளும் பதறினர்.
பதறிய ரசிகர்கள்
உடனடியாக அணியின் பிஷியோ, மைதானத்திற்கு வந்து ரோகித் சர்மாவை பரிசோதனை செய்தார். அப்போது கையை பிடித்து காயத்தின் தன்மையை பிஷியோ ஆய்வு செய்தார். இதனையடுத்து, ரோகித் சர்மாவுக்கு மருந்து கொடுத்து, பேட்டை பிடிக்க முடிகிறதா என்று ஆய்வு செய்தார். ரோகித் வலியால் துடித்தாலும், பேட்டிங் செய்வதாக கூறினார்.
ரோகித் 43 ரன்கள்
இதனையடுத்து ரோகித் சர்மா, தனது பேட்டிங்கை தொடர்ந்து வழக்கம் போல் பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. 37 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 43 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இந்த ஆட்டத்தின் போது ரோகித்துக்கு நடுவர் WIDE தராததால், அவர் நடுவரை கோபமாக திட்டினார்.