தொடர் காயங்கள்
ஐபிஎல் 2021 தொடர் மட்டுமின்றி முன்னதாக ஆஸ்திரேலியா தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் இந்திய வீரர்கள் தொடர் காயங்களுக்கு உள்ளாகினர். கிரிக்கெட்டில் ஒரு கேட்சை பிடிக்கும்போதோ, பவுண்டரி அல்லது சிக்சை தடுக்கும்போதோ அவர்களது டைவும் அதையடுத்து ஸ்லிப்பாகி காயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
பாதியில் வெளியேறிய புவனேஸ்வர்
கடந்த சில மாதங்களாக காயங்களால் அவதிக்குள்ளான பௌலர் புவனேஸ்வர் குமார் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் களமிறங்கி அதிரடி கிளப்பினார். ஐபிஎல் 2021 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய அவருக்கு நேற்றைய தினம் தொடையில் மீண்டும் வலி ஏற்பட்டதையடுத்து அவர் 3 ஓவர்களை மட்டுமே போட்டுவிட்டு மைதானத்தைவிட்டு வெளியேறினார்,
விரைவில் குணமாகும் என நம்பிக்கை
இந்நிலையில் கடந்த ஐபிஎல்லின்போது காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெரிய அளவிலான போராட்டத்திற்கு பிறகே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையில் அணியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சிறிய காயம் என்றும் விரைவில் சரியாகிவிடும் என்றும் அவர் கூறயுள்ளார்.
அணியில் இணைந்த வில்லியம்சன்
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த போட்டிகளில்பங்கேற்காத எஸ்ஆர்எச் வீரர் கேன் வில்லியம்சன் தற்போது ஓரளவிற்கு குணம் கண்டு நேற்றைய பாட்டியில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனிடையே அணியின் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியில் சென்று ஸ்கேன் எடுப்பது பயோ பபுள் விதிமுறைக்கு மாறானது என்பதால் ஸ்கேன் எடுக்கப்படவில்லை என்றும் ஆனால் விரைவில் எடுப்பார் என்றும் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்,
சரியாகியுள்ளதாக பாண்டிங் தகவல்
இதனிடையே சிஎஸ்கே வீரர் மொயீன் அலியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் இஷாந்த் சர்மாவின் குதிகால் வலி தற்போது சரியாகியுள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங் தகவல் தெரிவித்துள்ளார். அவர் அணியில் இணையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.