கோவை, டேராடூன்
இந்த வார இறுதியான, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கோவை மற்றும் டேராடூன் நகரங்களில் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட உள்ளது.
பஞ்சாப், கொல்கத்தா
இதுகுறித்து, பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி நடுவேயான போட்டியும், இரவு 8 மணிக்கு பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியும் நடக்கிறது.
சிஎஸ்கே சிங்கங்கள்
19ம் தேதியில், மாலை 4 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியும், இரவு 8 மணிக்கு மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியும் நடக்கிறது. இந்த போட்டிகள், கோவை, எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஸ்கிரீனில் காட்டப்படும்.
முதலில் வருவோருக்கே சீட்
இரு நாட்களிலும், 2 மணி முதல் கிரவுண்ட் திறக்கப்படும். முதலில் வந்தோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், சீட்டுகள் தரப்படும். இது முற்றிலும் இலவசம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. டேராடூனில் டாக்டர் அம்பேத்கர் கிரவுண்டில் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.