மும்பை: கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் பந்துவீச்சு, சர்ச்சைக்குறியதாக இருப்பதாக கூறி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆஃப் ஸ்பின் வீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சில போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக நரீன் விளையாடவில்லை.
இந்நிலையில், சுனில் நரீனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து அவரை மீண்டும் பந்து வீச பி.சி.சி.ஐ. அனுமதியளித்துள்ளது. இன்னொரு முறை சுனில் நரீனின் பந்து வீச்சு, விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தால் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கொல்கத்தாவில் இன்றிரவு நடைபெறவுள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் சுனில் நரீன், இதுவரை 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்புத் தொடரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.