பிளே-ஆஃப் பிரச்சனை
ஆனால், அதன் பின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது. அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற சூழலில் உள்ளது கொல்கத்தா.
தவறான முடிவுகள்
இது பற்றி பேசிய ஆண்ட்ரே ரஸ்ஸல், "எங்களிடம் நல்ல அணி உள்ளது. ஆனால், தவறான முடிவுகள் எடுத்தால், போட்டியில் தோற்றுத்தான் போக வேண்டும். அதை தான் நாங்கள் செய்த வருகிறோம்" என்று கூறி உள்ளார்.
அணி செய்த தவறுகள்
"என்னால் சில போட்டிகளை சுட்டிக் காட்ட முடியும். நாங்கள் சில இடங்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தால் அல்லது சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும்" எனக் கூறி அணி செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.
மோசமான பீல்டிங்
மேலும், பலரும் கூறுவது போல பேட்டிங் தங்கள் அணியின் பலவீனம் அல்ல, பந்து வீச்சு மற்றும் மோசமான பீல்டிங் தான் பலவீனம். அதனால்தான் போட்டிகளில் தோற்று வருகிறோம் எனக் கூறினார் ரஸ்ஸல். தங்கள் அணி தான் மோசமான பீல்டிங் அணி எனவும் கடுமையாக குற்றம்சாட்டினார்.
தினேஷ் கார்த்திக்கை சொல்கிறாரா?
ரஸ்ஸல் கூறும் பெரும்பாலான தவறுகள், கேப்டன்சி சார்ந்தவை. ஒருவேளை கேப்டன் தினேஷ் கார்த்திக்கை தான் குற்றம் சாட்டிப் பேசுகிறாரா ரஸ்ஸல்? பல போட்டிகளில் ரஸ்ஸல்-ஐ முன் வரிசையில் களமிறக்க வேண்டும் என்ற விமர்சகர்களின் எண்ணத்துக்கு மாறாக, கடைசி ஆறாவது, ஏழாவது வீரராகவே ரஸ்ஸல் பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் சிக்கல்
ஏற்கனவே, தினேஷ் கார்த்திக் கேப்டன்சி குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அணிக்குள் இருக்கும் முக்கிய வீரரே அவரை பெயர் சொல்லாமல் விமர்சித்து இருப்பது கொல்கத்தா அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.