ஆடுவாரா?
காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் அவதிப்பட்டு வந்த தோனி, அதில் இருந்து மீண்டு வருவதாகவும், போட்டிக்கு முன்னதாக அவர் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார் பிளெம்மிங்.
தோனி காய்ச்சல்
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. அதனால், ரசிகர்கள் கவலை அடைந்து இருந்தனர். அவர்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அப்போது பயமுறுத்தினார் பிளெம்மிங்.
முதுகு நரம்புப் பிரச்சனை
தோனிக்கு அதற்கு முன்பு முதுகில் நரம்புப் பிரச்சனை இருந்து வந்தது. அதனால், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. பின்னர், அந்த பிரச்சனை ஓரளவு குணமாகி விட்டது என்று தொடர்ந்து ஆடி வந்தார்.
இரு மோசமான தோல்விகள்
தோனி ஆடாத இரு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் படு மோசமாக தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டிகளில் வெற்றிக்கு எந்த விதத்திலும் போராடவில்லை. மொத்தமாக சரணடைந்து அதிர்ச்சி அளித்தது சென்னை. இது ரசிகர்களை மேலும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அணித் தேர்வு
கடந்த போட்டியில் தோனி மட்டுமின்றி டு, ப்லேசிஸ், ஜடேஜாவும் பங்கேற்கவில்லை. அதனால், அணித் தேர்விலும் குழப்பம் ஏற்பட்டது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட இருவரும் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
ஜடேஜா, டு ப்லேசிஸ்
டெல்லி கேபிடல்ஸ் போட்டிக்கான பயிற்சியில் ஜடேஜா, டு ப்லேசிஸ் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தோனி இதுவரை பயிற்சி மேற்கொள்ள வரவில்லை என்றே தெரிகிறது. தோனி ஆடாவிட்டால், அடுத்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் "சரண்டர்" ஆகிவிடுமே என்ற கவலையில் உள்ளனர் ரசிகர்கள்.