For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் பந்தை அடிச்சு ஆட முடியுமா? சீண்டிய இஷாந்த் சர்மா.. சிரித்து சமாளித்த ரோஹித் சர்மா!!

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதிய 34வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒன்றாக ஆடி வரும் இஷாந்த் சர்மா - ரோஹித் சர்மா இடையே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.

1
45910

என்ன கேப்டன்.. இப்படி பண்ணிட்டீங்க.. அவங்க 2 பேருக்கும் 4 ஓவர் கொடுத்துருக்கலாமே! என்ன கேப்டன்.. இப்படி பண்ணிட்டீங்க.. அவங்க 2 பேருக்கும் 4 ஓவர் கொடுத்துருக்கலாமே!

வேறு வேறு அணிகள்

வேறு வேறு அணிகள்

இந்திய அணிக்காக ஒன்றாக ஆடினாலும், ஐபிஎல் தொடரில் இஷாந்த் சர்மா டெல்லி அணிக்கும், ரோஹித் சர்மா மும்பை அணிக்கும் ஆடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய 3வது ஓவரில் தான் அந்த சம்பவம் நடைபெற்றது.

அடித்து ஆட வந்த ரோஹித்

அடித்து ஆட வந்த ரோஹித்

ரோஹித் சர்மா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அடித்து ஆட முடிவு செய்து பிட்ச்சில் இறங்கி வந்தார். ஆனால், பந்தை முற்றிலுமாக தவறவிட்டார். அந்த பந்தில், எட்ஜ் ஆகி கேட்ச் போயிருக்கவும் வாய்ப்பு இருந்தது.

சிரித்து சமாளித்த ரோஹித்

சிரித்து சமாளித்த ரோஹித்

ரோஹித் பந்தை தவறவிட்ட பின், இஷாந்த் சர்மா அவரைப் பார்த்து, "என் பந்தை அடிச்சு ஆட முடியுமா?" என நகைச்சுவையாக சீண்டினார். ரோஹித் சிரித்து சமாளித்தார். இஷாந்த் சர்மா கடந்த ஆண்டு முதல் பந்துவீச்சில் பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தல்

அசத்தல்

இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய இஷாந்த் சர்மா 17 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். நன்றாக பந்து வீசி இருந்தும் இஷாந்த் சர்மாவிற்கு 4 ஓவர்களையும் முழுமையாக பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.

Story first published: Friday, April 19, 2019, 13:05 [IST]
Other articles published on Apr 19, 2019
English summary
IPL 2019 DC vs MI : Ishant Sharma challenge Rohit Sharma after he misses out the ball
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X