9 முறை
இந்தா டாஸ் தோல்வியுடன் சேர்த்து, 2019 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 9 முறை டாஸில் தோல்வியை சந்தித்துள்ளார் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி. இந்த முறை டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்ற பின் மைக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.
|
அடிச்சுக்க ஆளே இல்லை
அப்போது, கோலி திரும்பி தன் அணியினரை பார்த்து, ஒன்பது விரல்களை காட்டி, முஷ்டியை மடக்கி வீரம் காட்டினார். "ஒன்பதாவது டாஸ் தோல்வி. இதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்லை" என சைகை காட்டி இருப்பார் போல.
செம ஜாலி
இதைக் கண்ட ரசிகர்கள் "என்னடா கோலி செம ஜாலி மூடில் இருக்கிறார். எப்போதும் ஆக்ரோஷமாக தானே இருப்பார்" என எண்ணி ஆச்சரியப்பட்டனர். சிலர் இதை இணையத்தில் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர்.
போட்டியும் போச்சு
டாஸில் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 187 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ரன்களில் தோல்வி அடைந்தது. டாஸும் போச்சு.. போட்டியும் போச்சு!!
பிளே-ஆஃப் வாய்ப்பு
இந்த தோல்வியை அடுத்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நழுவ விட்டுள்ளது பெங்களூர் அணி. அந்த பெருமையும் கேப்டன் கோலியையே சாரும்.