ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில், கொல்கத்தா அணி குல்தீப் யாதவ்வுக்கு கடந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்திய அணிக்கு சிறப்பாக பந்து வீசி வந்த குல்தீப், ஐபிஎல் தொடரில் பார்ம் இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
கவலை
ஐபிஎல் தொடர் முடிந்த இரு வாரங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், குல்தீப் யாதவ் அதற்குள் பார்முக்கு திரும்புவாரா என்ற கவலை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இது குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
டி20 கிரிக்கெட்
ஹர்பஜன் கூறுகையில், ஐபிஎல்-இல் குல்தீப் மோசமான பார்மில் தான் இருக்கிறார். டி20 கிரிக்கெட் சில சமயம் எந்த பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையையும் உடைத்து விடும். எனவே, அதனுடன் மற்ற கிரிக்கெட் போட்டிகளை ஒப்பிடக் கூடாது என குறிப்பிட்டார்.
யார் அடித்து ஆடுகிறார்கள்?
குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு நுணுக்கங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. அவரை யார் அடித்து ஆடுகிறார்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது என்கிறார் ஹர்பஜன் சிங். குல்தீப் பந்துவீச்சை அடித்து ஆடுவது இந்திய பேட்ஸ்மேன்கள் தான் என்கிறார்.
வேறு குல்தீப் யாதவ்
எனவே, இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் போது குல்தீப் நல்ல பார்மில் இருப்பார். ஒருநாள் போட்டி என்பது வேறு. அங்கே வேறு குல்தீப்பை பார்ப்பீர்கள் என்கிறார் ஹர்பஜன் சிங். ரசிகர்களும் அதே நம்பிக்கையில் தான் உள்ளனர்.