குல்தீப் யாதவ் பந்துவீச்சு
இந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் பந்து வீசி 59 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஓவருக்கு 14+ ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
கண்கலங்கினார்
மொயீன் அலி அவரது ஓவரில் 26 ரன்கள் சேர்த்து, அவரை கண்கலங்க வைத்தார். அந்த ஓவரின் முடிவில் மொயீன் அலி விக்கெட்டை எடுத்தாலும், குல்தீப் யாதவ் மனமுடைந்து, கண் கலங்கினார். ரசிகர்கள் குல்தீப் யாதவ்வின் மோசமான பந்துவீச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
|
நம்ப முடியவில்லை
குல்தீப் யாதவ் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர். டி20 மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையிலும் முன்னணியில் இருப்பவர். அவர் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக பந்துவீசி வருவதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதை பலரும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். மிக மோசமான, நம்ப முடியாத செயல்பாடு என விமர்சித்துள்ளனர்.
|
நீக்க வேண்டும்
இந்திய அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் குல்தீப் யாதவ், உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளார். சில ரசிகர்கள் குல்தீப்பை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.
|
தோனி இருந்தால்..
சில தோனி ரசிகர்கள், குல்தீப் யாதவ், தோனி இருக்கும் போது முற்றிலும் வேறு பந்துவீச்சாளராக இருக்கிறார் என கூறியுள்ளனர். தோனி இருந்தால், குல்தீப் அந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதும் உண்மையே!