பஞ்சாப் பேட்டிங
அது போன்று இந்தப் போட்டியில், கொல்கத்தா வீரர் கிறிஸ் லின்-இடம் பேசிக் கொண்டு இருந்தனர் வர்ணனையாளர்கள். அப்போது பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது. களத்தில் துவக்க வீரர்கள் ராகுல், கிறிஸ் கெயில் ஆடி வந்தனர்.
ராகுல் கொடுத்த கேட்ச்
மூன்றாவது ஓவரை வீசினார் சந்தீப் வாரியர். அந்த ஓவரின் 3வது பந்துக்கு முன், கிறிஸ் லின் மைக்கில் ஆண்ட்ரே ரஸ்ஸல் குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ராகுல் அடித்த பந்து, லின்-ஐ நோக்கி வந்தது.
ரசிகர்கள் ஆச்சரியம்
உடனே பேச்சை நிறுத்தி விட்டு, ஓடிய கிறிஸ் லின், கவனம் சிதறாமல் கேட்ச்சை பிடித்தார். இதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சில வினாடிகள் முன்பு வரை பேசியவர், எந்த கவனமும் சிதறாமல் எப்படி கேட்ச் பிடித்தார் என ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பேட்டிங்கிலும் கலக்கல்
பின்னர் பேட்டிங்கிலும் கலக்கினார் கிறிஸ் லின். 22 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒருவேளை கிறிஸ் லின் கவனம் சிதறி அந்த கேட்ச்சை விட்டிருந்தால், அதுவே தலைப்பு செய்தியாக மாறி, அவரை திட்டித் தீர்த்திருப்பார்கள்.