ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
இதோடு, தன் நான்காவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது அந்த அணி. இதில் வேடிக்கை என்னவென்றால், நான்கில் மூன்று முறை சென்னை அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது மும்பை அணி.
மும்பை அணி கடைசியாக சென்னை அணியுடன் ஆடிய மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் அந்த அணியை வீழ்த்தி ஹாட்ரிக் அடித்துள்ளது. சென்னை அணி கடைசியாக 2010இல் மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இது மட்டுமில்லாமல், லீக் போட்டிகளிலும் கூட மும்பை அணியிடம் அதிக முறை தோற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். குறிப்பாக இந்த சீசனில், லீக் சுற்றில் இரு முறை, பிளே-ஆஃப் சுற்றில் ஒரு முறை மற்றும் இறுதிப் போட்டியில் ஒரு முறை என நான்கு முறை மும்பை அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
கடைசி பந்து வரை பரபரப்பு.. ஹார்ட் பீட் எகிற வைத்த.. தரமான ஐபிஎல் ஃபைனல்.. என்ன நடந்தது? #MIvsCSK
மும்பை இந்தியன்ஸ் என்றாலே.. ஐயோ பாவம் அணியாக மாறி விடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அது ஏன் என்றுதான் புரியவில்லை.