ஸ்வீட் ராகுல்
2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடும் ராகுல், சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவின் ஆதரவை பெற்றுள்ளார். "உண்மையில், ராகுல் பெண்களிடம் "ஸ்வீட்டாகவும், மரியாதையாகவும்" நடந்து கொள்கிறார்" என கூறியுள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.
நல்ல மனிதர்
மேலும், "ராகுல் பார்முக்கு திரும்பியது நல்ல விஷயம். அவர் மிகவும் நல்ல மனிதர். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக நான் வருந்துகிறேன். ஆனால், நாம் வாழவும், கற்றுக் கொள்ளவும் வேண்டும்" என்று ராகுலுக்கு ஆதரவாக பேசினார்.
ஆட்டம் எப்படி?
ராகுல் பஞ்சாப் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடி 91 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு போட்டியில் மட்டுமே 71 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களே எடுத்தார்.
பிசிசிஐ விசாரணை
ப்ரீத்தி ஜிந்தா ராகுலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து பிசிசிஐ சார்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதில் தான் ராகுல், ஹர்திக் பண்டியா - இருவருக்கும் என்ன தண்டனை கொடுக்கப்படும் அல்லது இந்த விவகாரம் கைவிடப்படுமா என்பது தெரிய வரும்.