கடைசி பந்து வெற்றி
ஆனால், கடைசி பந்தை தவறவிட்டார் தோனி. அதையடுத்து ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் ரன் அவுட் செய்தார். 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்றது. இந்த கடைசிப் பந்து குறித்து தான் பேசியுள்ளார் பார்த்திவ் பட்டேல்.
திட்டம்
கடைசி பந்தில் தன் அணி என்ன செய்தது, தோனி என்ன செய்தார் என்பது குறித்து கூறினார் பார்த்திவ். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ்வை மெதுவாக பந்து வீசுமாறு கூறினோம்.
எதிர்பார்ப்பு
லெக் திசையில், பந்தை அடித்தால், 2 ரன்கள் வரை எளிதாக ஓடலாம் என்பதால், ஆஃப்-சைடில் பந்தை வீசுமாறு உமேஷ்-க்கு கூறப்பட்டது. தோனி எப்படியும் ஆஃப்-சைடில் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் ஓடுவார் என எதிர்பார்த்தோம்.
இதை எதிர்பார்க்கவில்லை
ஆனால், அவர் பந்தை தவறவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறி உள்ளார் பார்த்திவ் பட்டேல். இந்தப் போட்டியில் பார்த்திவ் பட்டேல் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.