குறி வைத்து தாக்குதல்
பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் கூட்டணியின் ஓவர்களில் நிதானம் காட்டிய டி வில்லியர்ஸ், வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரின் ஓவரை குறி வைத்து தாக்கினார். பார்த்திவ் பட்டேலும் பவர்பிளே ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்களை குறிவைத்து அடித்தார்.
தர்ம அடி
இவர்களின் அதிரடி தாக்குதலில் மாட்டிக் கொண்டு தர்ம அடி வாங்கிய பந்துவீச்சாளர் ஷமி. அவருக்கு அடுத்து அதிக அடி வாங்கிய பந்துவீச்சாளர்கள் அங்கித் ராஜ்புத் மற்றும் ஹார்டஸ் வில்ஜோன்.
ஷமி பரிதாபம்
ஷமி தன் முதல் மூன்று ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்திருந்தார். இதில் பார்த்திவ் பட்டேல் வெறித்தனமாக அடித்தவை அதிகம். அடுத்து 19வது ஓவரில் தன் நான்காவது ஓவரை வீசினார் ஷமி. அந்த ஓவரில் டி வில்லியர்ஸ் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து, மொத்தமாக 21 ரன்கள் சேர்த்தார்.
பெங்களூர் ஆச்சரியம்
அதே போல, அங்கித் ராஜ்புத் மற்றும் வில்ஜோன் ஓவர்களையும் விளாசினர் டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ். 20 ஓவர்களின் முடிவில் 170 ரன்களை தாண்டுமா என்ற நிலையில் இருந்த பெங்களூர் அணி, 202 ரன்களை எட்டியது.
பஞ்சாப் பந்துவீச்சு நிலை
தலா நான்கு ஓவர்கள் வீசிய ஷமி 53, அங்கித் ராஜ்புத் 46, வில்ஜோன் 51 ரன்கள் கொடுத்தனர். அதே சமயம், சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் 15, முருகன் அஸ்வின் 31 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.
ரன் குவிப்பு
டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள், பார்த்திவ் பட்டேல் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் தெறிக்கவிட்ட ஸ்டாய்னிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார்.