துவக்கம் சூப்பர்
தோனி கேப்டனாக இருந்த போட்டிகளில் சென்னை அணியில் டு ப்லேசிஸ் தவிர யாரும் சிறப்பாக துவக்கம் அளிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் முதல் விக்கெட் விரைவில் விழுந்துவிடும். ஆனால், ஹைதராபாத் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. ஆனால், அதை பயன்படுத்த தவறியது சென்னை.
மிடில் ஆர்டர் சரிவு
தோனி ஆடிய அனைத்து போட்டிகளிலும் மிடில் ஆர்டர் சிறப்பகாவே செயல்பட்டது. தோனி களத்தில் இறங்கினால், அவருடன் பேட்டிங் ஆடும் வீரரும் கடைசி வரை நின்று ஆடினார். ஆனால், இந்தப் போட்டியில் தோனி இல்லாத நிலையில், ரெய்னா, ஜாதவ், பில்லிங்க்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
கடைசி ஓவர்கள் சொதப்பல்
இந்த ஐபிஎல் தொடரில், தோனி எப்போதும் முதலில் பொறுமை காத்து கடைசி 2-3 ஓவர்களில் அதிரடி காட்டினார். அதில் முதல் பாதியை சரியாக செய்தது ராயுடு - ஜடேஜா ஜோடி. முதலில் நிதானம் காட்டிய அவர்கள், கடைசி பந்து வரை நிதானம் மட்டுமே காட்டினர். இந்த நேரத்தில் தோனி ராஜஸ்தான் போட்டியில் கடைசி ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை.
பந்துவீச்சாளர்கள்
தோனி ஒரு கேப்டனாக பேட்டிங்கை விட பந்துவீச்சுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார். அதை பல போட்டிகளில் நாம் பார்த்துவிட்டோம். தோனி கேப்டன் என்றால், சராசரியான பந்துவீச்சை கொண்ட அணி கூட பலமான பந்துவீச்சு அணியாக மாறிவிடும். அதற்கு, உதாரணம், இந்த ஐபிஎல் தொடர் தான்.
போட்டிக்கு, போட்டி வெற்றி
சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு தான் இந்த சீசனில் ஆடும் அத்தனை அணிகளிலும் மிக மோசமானது. எனினும், தோனி அதை வைத்தே போட்டிக்கு, போட்டி வெற்றி பெற்றுக் காட்டினார். அவர்கள் அனைவருமே தோனி இருந்த போது ஓரளவு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், ஹைதராபாத் போட்டியில் அனுபவ வீரர்கள் ஜடேஜா, தாஹிர் தவிர அனைவருமே ரன்களை வாரி இறைத்தனர்.
தோனியின் திட்டங்கள்
இது எல்லாவற்றையும் விட, கேப்டனாக தோனி தன் உள்ளுணர்வை நம்புவார். அதை வைத்தே விக்கெட் வீழ்ச்சியை உருவாக்குவார், ஒரு சிறிய பீல்டிங் மாற்றம், பந்துவீச்சாளருக்கு தரும் சைகை ஆகியவை விக்கெட் விழக் காரணமாக அமையும். ஹைதராபாத் போட்டியில் அது சுத்தமாக இல்லை.